Thursday, October 23, 2008

சென்னை சிறிலங்கா துணைத் தூதரகம் முற்றுகை- மாணவர்கள் ஆவேசத் தாக்குதல்- காவல்துறை துப்பாக்கிச்சூடு


[வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2008, 09:44 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]
சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தை தமிழக மாணவர்கள் முற்றுகையிட்டு இன்று ஆவேசத் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈழத் தமிழர்கள் மீதான சிறிலங்காவின் படுகொலையைக் கண்டித்து சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தை முற்றுகையிட சட்டக் கல்லூரி மாணவர்கள் முடிவு செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை முற்பகலில் நூற்றுக்கணக்கான சட்டக் கல்லூரி மாணவர்கள் தூதரகத்தை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்தும் தூதரகத்துக்குள் நுழைந்தும் அங்கிருந்த சிறிலங்கா தூதரகப் பணியாளர்களைத் தாக்கியும் அலுவலகத்தை நிர்மூலமாக்கியும் தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.

இதனையடுத்து அங்கு நான்கு முறை துப்பாக்கிச் சூட்டை சென்னை காவல்துறையினர் நடத்தினர் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்போராட்டம் தொடர்பாக 30 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment