Wednesday, October 22, 2008

இந்தியா - கும்மிடிபூண்டி அகதிகள் இலங்கை அரசிற்கெதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். தமிழீழ பதாகைகளுடன் ஊர்வலம்.

22 ஓக்டோபர் 2008 அன்று தமிழகதில் உள்ள கும்மிடிபூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் இலங்கை பேரினவாத அட்டூழிய அரசிற்கெதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அனைவரும் ஊர்வலமாக நடந்து சென்று அங்குள்ள வட்டாட்சியர் (விதானையார்) அலுவலகத்தில் ஈழத்தமிழர்களின் மீது சிங்கள பேரினவாத அரசு நடத்தும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த இந்தியா முன்வர வேண்டும் என்ற கோரிக்கை மனு ஒன்றை கையளித்தனர்.

ஆர்ப்பாட்டதின் போதும் ஊர்வலத்தின் போதும் பெய்த கன மழையையும் பொருட்படுத்தாது சிறுவர் சிறுமியரும்இ பெண்களும்இ பெருமளவில் கலந்து கொண்டு தங்கள் இன உணர்வை வெளிப்படுத்தினார்கள். நிகழ்வில் பெருமளவில் கலந்து கொண்ட ஆண்கள் தமிழீழ பதாகைகளை ஏந்தியவாறு சிங்கள அரசிற்கு எதிராக முழக்கமிட்டபடி சென்றார்கள்.

ஆர்பாட்டத்தில் உள்ளூர் தமிழ் மக்களும்இ அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டு தமது இன உணர்வை வெளிப்படுத்தினர்.

சிறுவர்கள் மழையில் நனைந்த படிஇ தமிழீழ பதாகைகளையும்இ சிங்கள அரசினால் உயிரிழந்த தமிழர்களின் படங்களையும் தாங்கிகொண்டு முழக்கமிட்டபடி
சென்றது கல்நெஞ்சரையும் கண்ணீர் சிந்த வத்தது.

ஒளிப்படத்தை(VIDEO) காண இங்கே அழுத்தவும்:

http:www.tamilsevai.com/kummidi.php






No comments:

Post a Comment