Thursday, October 16, 2008

விமல் வீரவன்சவிடம் மனோ கணேசன் கேள்வி



இந்தியாவின் ஆயுத உதவிகளையும் வேண்டாம் என கூறமுடியுமா என்று தேசப்பற்றுள்ள இயக்கத்தின் தலைவரும் தேசிய விடுதலை முன்னணி கட்சியின் தலைவருமான விமல் வீரவன்சவிடம் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் உள்ள ஊடகவியலாளர்களிடம் மனோ கணேசன் இது குறித்து கூறியதாவது:

இந்தியாவிடம் இருந்து சிறிலங்கா படைகளுக்கு வேண்டிய அனைத்து ஆயுத உதவிகனையும் பெறமுடியும் எனில், இன நெருக்கடி தீர்வுக்காக இந்தியாவிடம் ஆலோசனை பெறுவதற்கு விமல் வீரவன்சவுக்கு என்ன கௌரவப் பிரச்சினை?

இந்தியா வழங்கிய இராணுவ உதவியின் காரணமாகவே சிறிலங்கா படையினர் இன்று விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை கைப்பற்ற முடிந்தது. இதனை விமல் வீரவன்ச புரிந்து கொள்ள வேண்டும் என்றார் மனோ கணேசன்.

No comments:

Post a Comment