Thursday, October 16, 2008

தென்னிலங்கையில் 10 வருடம் சிறைவாசம் அனுபவித்து யாழ்ப்பாணம் திரும்பிய இளைஞன் சுட்டுக்கொலை




தென்பகுதிச் சிறைகளில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக சிறைவ?சம் அனுபவித்த பின் யாழ்ப்பாணம் திரும்பியிருந்த இளைஞனொருவர் நேற்று புதன்கிழமை காலை உரும்பிராய் சந்தியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உரும்பிராய் மேற்கு சிவகுல வீதியைச் சேர்ந்த மார்க்கண்டு சுதன்ராஜா (வயது 29) என்பவரே உரும்பிராய் சந்தியில் மருதனார்மடம் வீதியில் நேற்றுக் காலை 7.30 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த பத்து வருடங்களாக தென்பகுதியின் பல்வேறு சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர், கடைசியாக களுத்துறைச் சிறையிலிருந்து விடுதலையாகி கடந்த 20 நாட்களுக்கு முன்னரே யாழ்ப்பாணத்திற்கு திரும்பியிருந்தார்.

நேற்றுக் காலை இவர் தனது தாயாருடன் கிராம சேவையாளரின் அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவர் இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

முதுகில் குண்டுகள் பாய்ந்த நிலையில் இவர் தப்பியோடவே ஆயுதபாணிகள் இவரைத் துரத்திச் சென்றுள்ளனர். எனினும், தொடர்ந்து ஓட முடியாது அவர் வீதியில் விழவே ஆயுத பாணிகள் அவரது தலையில் இரு தடவைகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டுச் சென்றுள்ளனர்.

தனது மகனைக் காப்பாற்ற அவருடன் வந்த தாய் எவ்வளவோ முயன்றும் அது பலனளிக்கவில்லை.

இவரது சடலம் பின்னர் யாழ். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

No comments:

Post a Comment