
ஆனால் யுத்தத்துக்கு தூபம் போட்டு அதன் மூலம் பிழைப்பு நடத்த நினைக்கும் இந்த அரசாங்கத்தின் கபட நாடகத்துக்கு நாம் ஒரு போதும் இடங்கொடுக்க மாட்டோம், இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஹிரியால தேர்தல் தொகுதியில் செயற்படுத்தப்படவுள்ள "ஜன சுவய'' அபிவிருத்தித் திட்டம் குறித்து அப்பகுதி மக்களுக்கு தெளிவுறுத்தும் கூட்டம் ஒன்று இப்பாகமுவ நகரில் அண்மையில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரை நிகழ்த்துகையில்,இன்று சூரியன், சந்திரன், நட்சத்திரம் ஆகியவற்றை உவமைகளாக காட்டி அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளே சிறி லங்காவில் காணப்படுகின்றனர்.
அவர்களுக்கு தேவைப்படுவது மக்களை முட்டாள்களாக்கி அரச பதவிகளில் அமருவதாகும். ஆனால் நானோ உண்மையை பேசி நேரிய அரசியல் பாதை வழியாக செல்லவே விரும்புகின்றேன். மக்களுக்கு பசப்பு வார்த்தைகளையும் பொய்யான உறுதி மொழிகளையும் வழங்கி அவர்களை ஏமாற்றுகின்ற அரசியல் அதிகாரமே இப்போது எமது நாட்டில் மேலோங்கியுள்ளது.
ஆனால் எமது மக்கள் தற்போது இவ்வாறான போலியான அரசியல்வாதிகளை இனங்கண்டுள்ளார்கள். மக்களை ஒவ்வொரு நாளும் ஏமாற்றுவதென்பது முடியாத காரியம். நாட்டின் பாதுகாப்பு குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கதைக்கின்றனர். எனினும் எமது இராணுவ வீரர்கள் தமது மனைவி, பிள்ளைகள், பெற்றோர்களிடமிருந்து விடைபெற்று யுத்த களத்தில் போர் புரிகின்றனர். எனது தந்தையின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் இரு யுத்தங்கள் இடம்பெற்றன.
ஆயினும் அவர் மக்களுக்கான உதவி செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்களை கைவிட வில்லை. ஒருபுறம் யுத்தத்தை நடத்திக்கொண்டு மறுபுறம் மக்களுக்கு வீடு, வாசல், தொழில் வாய்ப்புக்கள், பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை ஆகியவற்றை தாராளமாக பெற்றுக் கொடுத்தார்.
நகரங்களின் தொழிற்றுறைகளை கிராமங்களுக்கும் உள்வாங்கினார். இரண்டு யுத்தங்கள் அன்று இடம்பெற்ற பொழுதும் அவர் மக்களை நட்டாற்றில் நிர்க்கதியாக்காமல் நாட்டையும் மக்களையும் காப்பாற்றினார். ஆனால் இன்றைய மகிந்தவின் ஆட்சியில் நடப்பதோ அவற்றுக்கு நேர் மாறானது என்பதை நான் கூறித்தான் நீங்கள் அறிய வேண்டுமென்பதில்லை. நாட்டின் யதார்த்த நிலையை எமது மக்கள் நன்கறிவார்கள் என்றார்.
No comments:
Post a Comment