Tuesday, October 7, 2008

யாழ். பல்கலைக்கழக மாணவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது



யாழ்ப்பாணத்தில் மின்மாற்றி தகர்ப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆம் திகதி கொக்குவில் பகுதியில் மின்மாற்றி ஒன்று தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக் கழக விவசாயப் பீட மாணவர் உள்ளிட்ட மூவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பிணை வழங்குவது தொடர்பில் பொலிஸார் எதிர்ப்பு தெரிவிக்காமையினால் தலா 25000 ரூபா ரொக்கப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment