Tuesday, October 7, 2008

இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து தி.மு.க. பிரம்மாண்டமான பொதுக்கூட்டம்



ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தலையிட வலியுறுத்தியும் ஈழத் தமிழர் பிரச்சினையில் தமது நிலைப்பாடு என்ன என்பது குறித்தும் தமிழ்நாட்டின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னையில் இன்று திங்கட்கிழமை மாலை மிகப் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு அமைச்சர்களான க.அன்பழகன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட தி.மு.க. அமைச்சர்கள், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.







No comments:

Post a Comment