Thursday, October 2, 2008

சுண்ணாகம் மின் உற்பத்தி நிலையத்தைத் திறப்பதற்கு ஜனாதிபதி யாழ் செல்கிறார்

mahinda-rajapakksaயாழ்ப்பாணம் சுண்ணாகத்தில் திறக்கப்படவுள்ள மின்சார உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் செல்லவுள்ளார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் மின்வெட்டுக்கு உள்ளாகின்ற யாழ் குடாநாட்டுக்குத் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்கும் நோக்குடன், 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 36 மெகாவோல்ட் மின்சார உற்பத்தியை நிலையம் சுண்ணாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

புதிதாக அமைக்கப்பட்ட மின்சார உற்பத்தி நிலையத்தை இம்மாதம் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திறந்து வைக்க உள்ளார் என சிறீலங்கா ஊடகத்துறை அமைச்சர் லக்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட மின்பிறப்பாக்கிகள் கடந்த சில மாதங்களின் முன்னர் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதற்காக தொழிநுட்பவியலாளர்களும் யாழ் குடநாட்டிலிருந்து தங்கியிருந்து பொருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment