Monday, June 7, 2010

மாளிகாகந்தை நீதிமன்ற சிறையிலிருந்து தப்பிய 11கைதிகள்;ஒருவர் மடக்கிப்பிடிப்பு

கொழும்பு, மாளிகாகந்தை, நீதிவான் நீதிமன்றத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் 11பேர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இவர்களில் ஒருவர் மருதானை தொழில்நுட்பக் கல்லூரிக்கௌ அருகில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த சிறைக்கூடத்தின் இரும்புக் கம்பியொன்றை உடைத்துக்கோண்டு இவர்கள் தப்பச் சென்றுள்ளனர் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி சில்வா தெரிவித்தார்.

மரண தண்டனை வித்திக்கப்பட்ட அறுவரும் சிறு குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்ட நால்வரும் இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் அடங்குவட்தாக அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment