Friday, June 11, 2010

மாணவன் தாக்கி சக மாணவன் உயிரிழப்பு

ஆனமடுவ பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவனின் தலையை பிடித்து சக மாணவன் குழாய் கிணற்றில் தாக்கியதால் காயத்திற்குள்ளானவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரான மாணவன் குறித்த மாணவனின் கழுத்தை நெறித்தும் குழாய் கிணற்றில் பிடித்து தாக்கியதாலும் காயத்திற்குள்ளா மாணவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். ஆனமடுவ வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.

இவர்கள் இருவருக்குமிடையில் தண்ணீர் போத்தல் ஒன்றுக்காகவே சண்டை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment