Tuesday, June 8, 2010

அவுஸ்திரேலியா நோக்கி 300 அகதிகள் அடங்கிய படகு பயணம்;கனடா அறிவிப்பு

தாய்லாந்து ஊடாக அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளது என நம்பப்படும் படகொன்றை கனடா நாட்டு அதிகாரிகள் கண்கானித்துக்கொண்டிருப்பதாக அந்நாட்டு செய்திச் சேவையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த படகில் 300 அகதிகள் அடங்குவதாகவும் அவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்காகவே சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பயணித்துக்கொண்டிருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலியாவை நோக்கி 300 அகதிகள் பயணித்துக்கொண்டிருப்பதாக அந்நாட்டு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment