அண்மையில் காஸா பகுதிக்கு நிவாரண பொருட்களை கொண்டு சென்ற புளோட்டியா கப்பல் இஸ்ரேலிய படையினரின் தாக்குதலுக்கு இலக்கானது தெரிந்ததே.
இத்தாக்குதலின் போது இலங்கையை சேர்ந்த அஹமத் லுக்மான் படு காயத்திற்குள்ளானார்.
காலில் இரண்டு துப்பாக்கி குண்டுகள் துளைத்து படு காயங்களுக்குள்ளான அஹமத் லுக்மான் தற்போது துருக்கி ஸ்தான்புல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அஹமத் லுக்மான் அவுஸ்ரேலியா பல்கலைக்கழகம் ஒன்றின் சட்டத்துறை மாணவராவார்.
இவர் காயத்திற்குள்ளாகி முதல் 12 மணித்தியாலங்கள் இவருக்கான மருத்துவ உதவி மறுக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது இவர் குணமடைந்து வருவதாக தெரியவருகின்றது.
No comments:
Post a Comment