Wednesday, June 9, 2010

நெடுங்கேணியில் கொள்ளை: கணவருக்கு துப்பாக்கிச்சூடு மனைவியின் கை துண்டிப்பு







நெடுங்கேணியில் மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் வயோதிபரான கணவனும் மனைவியும் கொள்ளையர்களினால் தாக்கப்பட்டு நகைகள் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வயோதிபரான இந்தத் தம்பதியினர் இரவு வேளையில் மற்றுமொரு வீட்டிற்குச் சென்று நித்திரை கொள்வது வழக்கம் என்றும் அவ்வாறு சென்று கொண்டிருந்தபோது திடீரென பற்றைக்குள் இருந்து வெளிப்பட்ட திருடர்கள் கணவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் மனைவியின் கையிலிருந்த காப்புக்காக அவரது கையைத்துண்டித்து எடுத்துச் சென்றதாகவும் தலையணைக்குள் மறைத்து வைத்திருந்த பணம் நகை என்பவற்றையும் கொள்ளையிட்டுள்ளதாகவும் காயமடைந்த இந்த வயோதிபத் தம்பதியினர் தற்போது வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெடுங்கேணி நாவலர் வீதியைச் சேர்ந்த இராசலிங்கம் (வயது 64) விக்னேஸ்வரி (52) ஆகியோரே இந்தச் சம்பத்தில் காயமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment