Thursday, June 10, 2010

19ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டி ஜொஹன்னஸ்பர்க்கில் இன்று ஆரம்பம்

உலகம் முழுவதிலுமுள்ள கால்பந்து ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் 19ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டித் தொடர் தென் ஆப்பிரிக்காவின் ஜொஹன்னஸ்பர்க் நகரில் இன்று ஆரம்பமாகிறது.

இந்த உலகக் கின்ண கால்பந்துப் போட்டியை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறையென சர்வதேச கால்பந்து சம்மேளனம் நடத்தி வருகிறது. தற்போது தென் ஆப்பிரிக்காவின் ஜொஹன்னஸ்பர்க்கில் 19ஆவது உலகக் கிண்ணப் போட்டிகள் இன்று முதல் நடைபெறவுள்ளன. இந்நிலையில் இந்தப் போட்டியின் ஆரம்ப விழா நேற்று ஆர்லான்டோ ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

அந்தவகையில் இன்று ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் முதல் போட்டியில், தென் ஆப்பிரிக்காவும், மெக்சிகோவும் மோதுகின்றன. அத்துடன் ஜூலை 11ஆம் திகதியே இறுதி்ப் போட்டி நடைபெறவுள்ளது.

64 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் அதில் மொத்தம் 32 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த 32 அணிகளும் தலா நான்கு அணிகளைக் கொண்ட எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 16 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும். அவற்றிலிருந்து 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். அதிலிருந்து நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

பிரேசில், அர்ஜென்டினா ஆகிய அணிகள் வழக்கம் போல ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பையும், ஆதரவையும் ஏந்தியபடி போட்டித் தொடருக்குள் நுழையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment