Thursday, June 10, 2010

பனடோல் மாத்திரை கூட இல்லை வன்னியில் குடியேற்றப்பட்ட மக்களுக்கு நடமாடும் வைத்திய சேவை நடத்துக செல்வம் எம்.பி. அரசிடம் வலியுறுத்து






வன்னியில் மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் நடமாடும் வைத்தியசேவையை நடத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் எம்.பி.யான செல்வம் அடைக்கல நாதன் நேற்று நாடாளுமன்றத்தில் வலியு றுத்தினார்
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வைத்தியசேவை தொடர்பான சபை ஒத்தி வைப்புவேளை பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர் பாக மேலும் கூறியவை வருமாறு:
வன்னியில் மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் வைத்தியசேவைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது. பனடோல் மாத் திரைகூட அங்கு இல்லை. அங்கு நட மாடும் வைத்தியசேவை ஒன்று நடத்தப் படவேண்டும்.
வைத்தியர்கள் அங்கு தங்கிச் சேவை செய்வதற்கு அரசு வசதிகளைச் செய்து கொடுக்கவேண்டும். அவர்கள் அங்கு சேவை செய்ய மனமிருந்தாலும் அவர்கள் தங்குவதற்கு இடமில்லை.
வன்னியில் தங்கி அம்மக்களுக்கு சேவை செய்யவிரும்பும் வைத்தியர்களுக்கு அரசு முன்னுரிமை வழங்கவேண்டும். அவர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் வன்னி மக்களுக்கான இந்தச் சேவை யைப் பெற்றுக்கொடுக்கமுடியும்.
வன்னி மக்களின் சுகாதார விடயம் தொடர்பில் அரசு தீவிர கவனம் செலுத்தவேண்டும். அவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment