வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் 53 ஜோடிகளுக்கு திருமண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். |
இந்தநிலையில் எதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கழமை இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கான பல வசதிகள் அரசாங்கத்தால் செய்து கொடுக்கப்படவுள்ளதாகவும் அங்கீரிக்கப்பட்ட திருமண சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கான திருமாங்கல்யத்தை அகில இலங்கை இந்துமாமன்றம்; வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
Thursday, June 10, 2010
வவுனியா பம்பைமடுவில் விடுதலைப்புலிகள் ஜோடிகளுக்கு திருமணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment