முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பிரதேசத்தில் உள்ள மாணிக்கபுரம் பகுதியில் தமிழ் பெண்கள் இருவர் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட இருவரும்அண்மையில் அரசினால் இப்பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 6 படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை இந்தச் சந்தேக நபர்கள் 6 பேரும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டனர்.
இவர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்று கிளிநொச்சி நீதிவான் பெருமாள் சிவகுமார் பொலிசாருக்கு உத்தரவிட்டார். அன்றைய தினம் சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment