Thursday, June 10, 2010

இலங்கை இந்திய உடன்படிக்கையின் கீழ் தாம் பொதுமன்னிப்பை பெற்றுள்ளேன்: டக்ளஸ் தேவானந்தா




இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் அனைத்து அரசியல் தலைவர்களும் பொதுமன்னிப்பை பெற்றுள்ளார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளது.

எக்ஸ்பிரஸ் இந்தியா. கொம். இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்

1986 ஆம் ஆண்டு சென்னை சூழமேடு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் நேற்று சென்னை மேல் நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தாவை கைதுசெய்யுமாறு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதைவிட டக்ளஸ் தேவானந்தா மீது கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக தமிழ்நாட்டில் 3 வழக்குகள் உள்ளன.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள அமைச்சர், இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்டுள்ள ஒப் பந்தப்படி எல்லா அரசியல் தலைவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டு உள்ளது. எனக்கும் ஏற்கனவே மன்னிப்பு கொடுக்கப்பட்டு விட்டது. எனவே எந்த வழக்குகளும் என்னை கட்டுப்படுத்தாது.

எனினும் சட்டரீதியான முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு முகங்கொடுக்கவும் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் இந்தியாவுக்கு தற்போது சட்ட விரோதமாக வரவில்லை. உரிய சட்டப்படி வந்துள்ளேன். நான் இந்தியா வந்து செல்ல எந்த தடையையும் அரசு விதிக்கவில்லை. அந்த பட்டியலில் நான் இல்லை.

இதேவேளை இந்திய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர், இது தொடர்பில் கருத்துரைக்கையில், இந்தியாவுக்குள் பிரவேசிக்காதபடியான கண்காணிப்பு பட்டியலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment