Thursday, June 10, 2010

ஆபாச விளம்பரப்பலகை, சுவரொட்டிகளை அகற்றுவதற்கு தீர்மானம்

கொழும்பு நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஆபாச விளம்பரப் பலகைகள் மற்றும் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கு பெண் பொலிஸாரும் சிறுவர் சபையும் இணைந்து தீர்மானித்துள்ளன.

அத்துடன், கவர்ச்சிப் படங்களைப் பிரசுரிக்கும் சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெண் பொலிஸாரும் சிறுவர் சபையும் இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில், கொழும்பு நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஆபாச விளம்பரப் பலகைகள் மற்றும் படங்களை அகற்றும் நடவடிக்கைகளை இவர்கள் இன்று முதல் ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, கையடக்கத் தொலைபேசி ஊடாக பயன்படுத்தப்படும் ஆபாச இணையதளங்களை தடைசெய்வதற்கான நடவடிக்கையை ஏற்கனவே பெண் பொலிஸார் மற்றும் சிறுவர் சபையும் இணைந்து மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment