30வருட பயங்கர வாதத்திலிருந்து விலகி ஜன நாயகத்துக்குள் நுழைந்து அமைச்சர்களான சிலர் இன்றும் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருக்கின்றனர் என்று ரவி கருணா நாயக்க எம்.பி.நேற்று நாடாளுமன்றில் கூறினார்.
சட்டவிரோத ஆயுதங்களைக் களைவது தொடர்பான தனிநபர் பிரேரணை ஒன்றை நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:
நாட்டில் அதிக எண்ணிக்கையில் சட்டவிரோத ஆயுதங்கள் உள்ளன. பிரதேச சபை உறுப்பினர்கள் கூட இப்படியான ஆயு தங்களை வைத்திருக்கின்றனர். ஜன நாயகத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் இவ்வகையான ஆயுதங்கள் அனைத்தையும் களைவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சட்டவிரோத ஆயுதங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும். அவர்களுக்கு உரிமம் தேவைப்பட்டால் உரிமம் வழங்கமுடியும்.
30 வருட பயங்கரவாதத்தில் இருந்து விலகி ஜனநாயகத்துக்குள் நுழைந்து அமைச்சர்களாகியவர்களும் ஆயுதங்களை வைத்துள்ளனர். இதனால் பிரச்சினை வரு கின்றது. இந்த நிலைமை தொடர்ந்தால் இன்னும் 10,15 வருடங்களில் நிலைமை மோசமாகும்.
அரசியல் கட்சிகளோ, அரசியல்வாதிகளோ ஆயுதங்களை வைத்திருக்கத் தேவையில்லை. கிழக்கில் அரசியல் கட்சி கள் ஆயுதங்கள் வைத்துள்ளன என்று அமைச் சர் கருணாவே சொல்கிறார்.
நாடுமுழுவதும் உள்ள இவ்வாறான சட்டவிரோத ஆயுதங்கள் அனைத்தும் களையப்பட வேண்டும். கட்சி பேதங் களை மறந்து நாம் அனைவரும் ஒன்றி ணைந்து இந்த விவகாரத்தில் செயலாற்ற வேண்டும். என்றார்.
Friday, June 11, 2010
அமைச்சர்களான சிலர் இன்னமும் ஆயுதங்களை வைத்திருக்கின்றனர் நாடாளுமன்றில் ரவி கருணாநாயக்க தெரிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment