Friday, June 11, 2010

மேர்வின் சில்வாவின் லேட்டஸ்ட் காமெடி


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அல்லது வடக்கில் பணியாற்றிய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஜெனரல் சரத் பொன்சேக்கா ஈடுபட்டால், தான் அவரை கொன்று தான் மரணிக்க தயார் என பெருந்தெருக்கள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். கிரிபத்கொடவில் நேற்று (10) நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி , விடுதலைப்புலிகளுக்கு எதிராக வடக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையின் இரகசியங்களை சர்வதேசத்தின் மத்தியில் முன்வைத்துள்ளதாகவும் இதனால் அவருக்கு எதிராக தனியான சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார். இராணுவத்தினருககு எதிராக ஜெனரல் சரத் பொன்சேக்கா வெளியிட்டுள்ள தகவல்கள், இலங்கையின் இராணுவத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல் குணரட்ன, சவேந்திர சில்வா, ஜகத் டயஸ் போன்ற போர் வீரர்களை காட்டிக்கொடுப்பதற்காக பொன்சேக்கா வெளியிட்;;டுள்ள கருத்துக்களை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment