Thursday, June 10, 2010

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் படையினர் கொள்ளை!


கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுளைந்த முகமூடியணிந்த, ஆயுதம் தாங்கிய கும்பல் வீட்டு உரிமையாளரை தாக்கிவிட்டு அங்கிருந்த பணம், நகை என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் வீட்டு உரிமையாளரை இரும்புச் சுத்தியலால் தாக்கியதுடன் அவரைக்கட்டியும் வைத்துள்னர்.பின்னர் அவரது மனைவி மற்றும் உறவினர்களை ஆயுதமுனையில் மிரட்டி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி சிறிலங்கா காவல்துறையிடம் முறையிடச்சென்றபோது அவர்கள் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னிப்பகுதியில் முழுமையாக சிறிலங்காப்படையினரின் வல்வளைப்புக்கு உட்பட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக்கப்பட்டுள்ளன.

வெளியாட்கள் யாரும் படையினரின் அனுமதியின்றி வன்னிப்பகுதியின் எந்த ஊருக்குள்ளும் நுழைய முடியாது. எனவே படையினரே இந்த கொள்ளைச் சம்பங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment