Tuesday, June 8, 2010

சிலாபத்தில் இந்திய வர்த்தகர் கடத்தல்; கடுமையான தாக்குதலின் பின் விடுவிப்பு

சிலாபம் பிரதேசத்தில் கடமையாற்றிவரும் இந்திய வர்த்தகர் ஒருவர், கடத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தனிப்பட்ட விரோதம் காரணமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது எம்.மணியம் ஹரிராஜ் என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவராவார்.

இந்த கடத்தல் சம்பவத்துக்கு ஆரச்சிகட்டுவை பிரதேச சபையின் தலைவர் ஜகத் சமந்த என்பவரே காரணாமாகவிருந்தார் என்று பொலிஸ் விசாரணைகளியிருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்துள்ள இந்திய வர்த்தகர் தற்போது சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment