Monday, June 14, 2010

கி.மா.சபை உறுப்பினர்கள் நாடு திரும்பியும் இந்தியாவில் தங்கியிருக்கும் பிள்ளையான்

தற்போது நான் புது டில்லியில் தங்கியிருப்பது தன்னுடைய தனிப்பட்ட நோக்கமே தவிர, இந்திய அரசின் உயர் அதிகாரிகளை சந்திக்கும் நோக்கில் அல்ல என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சற்று முன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மாகாண சபை உறுப்பினர்களையும்உள்ளடக்கிய குழு ஒன்று கடந்த வாரம் இந்தியாவின் கேரளா பகுதிக்கு சென்றிருந்தது.

இக்குழு உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை நாடு திரும்பினர். எனினும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாடு திரும்பாமல் புதுடில்லியில் தங்கியுள்ளார்.

இது சம்பந்தமாக இந்தியாவில் தங்கியுள்ள முதலமைச்சருடன் தமிழ்மிரர் இணையதளம் நேரடியா தொடர்பு கொண்டு வினவியது.

அதற்கு அவர், தற்போது நான் புது டில்லியில் தங்கியிருப்பது தன்னுடைய தனிப்பட்ட நோக்கமாகும். இந்திய அரசின் உயர் அதிகாரிகளை சந்திக்கும் நோக்கில் இங்கு வரவில்லை.

ஒரிரு நாட்கள் இங்கு கழித்து விட்டு, கேரளா சென்று இரண்டாவது குழுவாக இந்தியா வந்துள்ள எமது மாகாண சபை உறுப்பினர்களை சந்திக்கவுள்ளேன். அதன் பிற்பாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடு திரும்பவுள்ளேன் என்று முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்

No comments:

Post a Comment