Wednesday, June 9, 2010

பொது இடங்களில் தகாதவாறு நடந்ததாக 200 இளம் ஜோடிகளுக்கு எதிராக வழக்கு

பொது இடங்களில் தகாத முறையில் நடந்துகொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 200 இளம் ஜோடிகள் நாளை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நாட்டின் இரு பிரதான நகரங்களான குருநாகல் மற்றும் மாத்தறை போன்ற பிரதேசங்களிலிருந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பீ.பீ.சி. செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

குறுத்த பிரதேசங்களிலுள்ள பொது மைதானங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் முத்தமிடுதல் உள்ளிட்ட தகாத நடவடிக்கைகைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே மேற்படி ஜோடிகள் கைதாகியுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்களில் பெரும்பாலானோர் 15 வயதான பாடசாலைச் செல்லும் சிறுமிகள் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னரும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சுமார் 350 ஜோடிகள் உரிய எச்சரிக்கைகளின் பின்னர் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மேற்படிச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment