Saturday, June 12, 2010

அடுத்த படத்துக்கு நித்தி ரெடி- ஸ்டார் த கமேரா


50 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் செக்ஸ் புகாரில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்தது நித்தியானந்தா மீதான குற்றச்சாட்டு. இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் இமாச்சல பிரதேசத்தில் ஒரு மடத்தில் தங்கி இருந்த நித்தியானந்தா கர்நாடக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து போலீசார் கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட்டார்.


இந்நிலையில் 50 நாள் ஜெயில் காற்றை சுவாசித்த நித்தியானந்தாவுக்கு கர்நாடக ஐகோர்ட் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் ( இன்று ) வழங்கியது. இவர் நாளை ஜெயிலில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜாமீன் அளித்த கோர்ட், அவருக்கு பல நிபந்தனைகளை விதித்துள்ளது. இதன்படி ஆசிரமத்தை விட்டு வெளியே போகக்கூடாது. மதம் தொடர்பான சொற்பொழிவுகள் ஆற்றக்கூடாது. பிடதி போலீஸ் ஸ்டேஷனில் 15 நாட்களுக்கு ஒருமுறை வந்து கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட் ஒப்படைக்க வேண்டும் என பல நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.


இவரது லீலை குறித்து ஜாமீன் அளித்த நீதிபதி வெளியிட்டுள்ள கருத்தில், நித்தியானந்தா மக்கள் மனதை புண்படுத்தி விட்டார், ஆன்மிகம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றியுள்ளார் என கூறியுள்ளார். இதற்கிடையில் ரஞ்சிதாவுடன் நித்தி இருந்த வீடியோ காட்சியில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர், அவரேதான் என்று இதனை ஆய்வு செய்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment