Tuesday, June 1, 2010

குருநகர்-பூநகரி படகு சேவை ஆரம்பம்

வடபகுதி குருநகர் – பூநகரி படகுசேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இதனை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ள நிகழ்வில் வடபகுதி ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி, அமைச்சர் டக்லஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் நமால் ராஜபக்ஸ ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
இதன் மூலம் தரைவழியாக இரண்டரை மணிநேரம் மேற்கொள்ளும் பயணம் சுமார் 45 நிமிடங்களுக்கு குறைக்கப்படும் என தெரியவருகிறது. இதற்கு ஒருவழிக்கட்டணமாக ரூபா 40 அறவிடப்படுவதாக தெரியவருகிறது.

No comments:

Post a Comment