Tuesday, June 1, 2010

பேராதனை பல்கலை மாணவி துவாரகாவை விடுதலை செய்யுமாறு கோரிக்கை

கடந்த 2009 நவம்பர் மாதம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவி இராசையா துவாரகாவை விடுதலை செய்யுமாறு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் அகதி முகாம்களுக்குள் வாழ்ந்து வருவதாகவும் அவர்களை சுகந்திரமாக நடமாட அனுமதிக்குமாறு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டியுள்ளது.

இது சம்பந்தமாக மேலும் கருத்துத் தெரிவித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் உபுல் பிரேமரத்ன, இராசையா துவாரகா கைது செய்யப்பட்டமைக்கான பிரதான காரணம் விடுதலைப் புலிகளுடன் அவர் தொடர்பு வைத்திருந்தார் என்ற காரணத்தினாலேயே ஆகும். எப்படி துவாரகாவால் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைக்காமல் இருந்திருக்க முடியும்? அவள் வாழ்ந்த கிளிநொச்சி பகுதி கடந்த 30 வருடங்களாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment