Monday, June 7, 2010

போர்க்குற்ற விசாரணைகளுக்கு பொன்சேகா ஒத்துழைத்தால் அவரை தூக்கிலிடுவோம்: கோத்தபாயா

போர்க்குற்ற விசாரணைகளுக்கு ஜெனரல் பொன்சேகா ஒத்துழைத்தால் அவரை நாம் தூக்கில் போடுவோம் என சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா தெரிவித்துள்ளார்.

பி.பி.சி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பொன்சேகா ஒரு பொய் கூறுபவர், துரோகி என்பதை நிரூபித்துள்ளார். போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களை தான் மறைக்கப்போவதில்லை எனவும், அவற்றை வெளிப்படையாக தெரிவிக்கப்போவதாகவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அவர் அவ்வாறு தெரிவிக்க முடியாது. அவர் தளபதியாக பணியாற்றியவர். எனவே அவர் அவ்வாறு செய்தால் நாம் அவரை தூக்கில் போடுவோம். இதனை நான் உங்களுக்கு வெளிப்படையாகவே தெரிவிக்கிறேன். அவர் நாட்டுக்கு துரோகம் செய்யமுடியாது.

எமது நாடு சுதரந்திரமுள்ள நாடு எனவே நாம் தான் விசாரணைகளை மேற்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment