Thursday, November 20, 2008

மேலதிக சிகிச்சைக்காக செல்லும் நோயார்களை திருப்பியனுப்பும் சிறிலங்கா படை

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனைகளில் இருந்து வவுனியாவுக்கு நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லும் நோயாளர் காவு வாகனங்களை சிறிலங்கா படையினர் திருப்பியனுப்பும் அவலம் தொடர்கின்றது.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மருத்துவமனைகளுக்குரிய நோயாளர் காவு வாகனங்களை மூன்று நாட்களாக வவுனியாவுக்கு செல்லவிடாது ஓமந்தையுடன் திருப்பி அனுப்பிய சிறிலங்கா படையினர், நேற்று முன்நாள் நோயாளர் வாகனங்களை வவுனியாவுக்கு செல்ல அனுமதியளித்த போதிலும் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கு அனுமதிக்கவில்லை.

நோயாளர்களின் அவலம் தொடர்பாக மருத்துவமனைகளின் நிர்வாகத்தினர் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடன் தொடர்பு கொண்டதுடன் நோயாளர் வாகனங்களை இடர்கள் இல்லாமல் வவுனியா சென்று வர சீரான போக்குவரத்து ஒழுங்கினை செய்து தருமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment