கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமர் ஆரம்பமாம் - படைத்தரப்பு அறிவிப்பு
கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான இறுதிச் சமர் ஆரம்பமாகியுள்ளது என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அக்கராயன்குளம், திருமுறிகண்டி, கொக்காவில் ஆகிய பகுதிகள் ஊடாக படை நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறீலங்காப் படையினரின் பல்வேறு படைப்பிரிவும் களமிற்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment