Thursday, November 20, 2008

மட்டக்களப்பில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் காவலரண் மீது தாக்குதல்: இருவர் பலி




மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கோப்பாவெளியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

கோப்பாவெளியில் உள்ள மட்டக்களப்பு - பதுளை வீதியில் இன்று வியாழக்கிழமை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment