Sunday, November 23, 2008

ஹிரோசிமாவில் வீசப்பட்ட அணுகுண்டின் நிறைகொண்ட வெடிமருந்துகள் வன்னியில் வீசப்பட்டுள்ளன: முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர



வன்னி மீது இதுவரையில் 14.4 மில்லியன் கிலோ நிறைகொண்ட வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் இது ஐப்பான் நாட்டில் உள்ள ஹிரோசிமாவில் வீசப்பட்ட அணுகுண்டின் நிறைக்கு ஒப்பானது எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

வன்னிப் பகுதி மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் 14.4 மில்லியன் கிலோ நிறைகொண்ட குண்டுகளை வீசியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச பெருமையாக கூறியுள்ளார்.

14.4 மில்லியன் கிலோ நிறைகொண்ட தற்போதைய நவீன வெடிமருந்தானது 18 கிலோ தொன் ரிஎன்ரி வெடிமருந்துக்கு இணையானது.

ஹிரோசிமாவில் அமெரிக்கா வீசிய அணுகுண்டின் நிறையான 13 தொடக்கம் 18 கிலோ தொன் ரிஎன்ரி வெடிமருந்துக்கு ஒப்பானது.

எனவே, ஹிரோசிமாவில் வீசப்பட்ட அணுகுண்டின் நிறைகொண்ட வெடிமருந்துகள் வன்னியில் வீசப்பட்டுள்ளன என்றார் அவர்.

No comments:

Post a Comment