Monday, November 24, 2008

போரினால் இரண்டரை லட்சம் மாணவர்களின் கல்வி பாதிப்பு -யுனிசெப்


இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாக சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைள் பாதிப்படைந்துள்ளதாக யுனிசெப் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், சிறுவர்கள் தங்களது ஆரம்பக் கல்வியை தொடர முடியாத நிலை காணப்படுவதாகவும் யுனிசெப் நிறுவனத்தின் ஆய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்குவதற்காக 65 ஆயிரம் பாடசாலை உபகரணங்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான உபகரணங்கள் பொதியிடப்பட்டு வருவதாகவும் யுனிசெப் குறிப்பிட்டுள்ளது.

வடக்கில் மாணவர்கள் கல்வியைத் தொடரும் வகையில் 35 தற்காலிக கல்விக் கூடங்களை யுனிசெப் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment