Wednesday, November 26, 2008
54வது அகவையில் வாழ்த்து
அண்ணன் என்று சொல்லடா
தமிழ் மன்னன் என்று சொல்லடா
பிரபாகரன் எனும்
தமிழ் வீரனை..!
அவன் பேச்சில் ஒரு மூச்சடா
மூச்சில் கூட தமிழடா
தமிழ் மானம் காக்கும் வீரம்
அவன் தோள்களில்..!
படை நடத்தம் சிங்களம்
பதறிப் போகும் பாரடா
அண்ணன் படையின் வீரம்
மாழ்வதில்லைப் பாரடா..!
சண்டைக்களத்தில் அவன் வாழ்வடா
சாவுக்கும் அஞ்சாத வீரன்டா
தமிழ் மானம் அவன் உயிரடா
சயனைட் காவும் தோழனடா அவன்..!
அண்ணன் தலைமையில்
வேங்கைகள் பாரடா..
தமிழீழத்தின் மலர்வடா
வெறும் கைகளில் இல்லையடா
நீயும் நில்லடா
அண்ணன் வழியில் கரங்கோர்த்தே..!
வாழ்த்தடா வாழ்த்து
அண்ணனை வாழ்த்து
54வது அகவையில் வாழ்த்து
வாழ்த்தும் போதே
வீரம் வரும்...
விழித்தெழுந்து நடவடா
அண்ணன் பாதையில்
தாய் மண்ணை மீட்க..!
நன்றி யாழ் இணையம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment