Monday, November 24, 2008

தாயகம் எங்கும் மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகள் நாளை தொடங்குகிறது



தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் மாவீரர்களுக்கான எழுச்சி நாள் நிகழ்வுகள் இன்று தொடங்குகின்றன.

இந்நிகழ்வுகளுக்காக தமிழீழ தாயகம் எழுச்சிக்கோலம் பூண்டிருக்கின்றது.

எங்கும் சிவப்பு-மஞ்சள் வர்ண கொடிகள் கட்டப்பட்டு மாவீரர்களின் திருவுருவப் படங்கள் கொண்ட மாவீரர் மண்டபங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணிக்கு தமிழீழ தேசியக் கொடியேற்றலுடன் தொடங்கவுள்ளன.

பொதுச்சுடரேற்றல், தேசியக் கொடியேற்றல், திருவுருவப்படங்களுக்கு ஈகைச்சுடரேற்றல், மலர்வணக்கம், அகவணக்கம், உறுதியுரை எடுத்தல், நினைவுரைகள் எனும் ஒழுங்கில் எழுச்சி நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

மாவீரர் துயிலும் இல்லங்களில் இன்று காலை 8:30 மணிக்கு ஏற்றப்படும் தேசியக்கொடி நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாள் நிகழ்வு முடிவடையும் போது இறக்கப்படும்.

பொது நிறுவனங்கள், பள்ளிகளில் இன்று தொடக்கம் 27 ஆம் நாள் வரை ஒவ்வொரு நாளும் பணி முடிந்த பின்னர் பிற்பகல் 12:00 மணிக்குப் பின்னரும் மாலை 6:00 மணிக்கு முன்பாகவும் இறக்கப்பட்டு மறுநாள் காலை ஏற்றப்படும்.

இதற்கான ஒழுங்குகள் அனைத்து இடங்களிலும் செய்யப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment