Monday, November 24, 2008

அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்: இருவர் பலி; நால்வர் படுகாயம்



அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சசாறு வனப்பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3:05 நிமிடமளவில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.

இதில் அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment