கொழும்பில் இருந்து வடபகுதிக்கான ரயில் சேவை மீண்டும் மதவாச்சி வரையும் நடைபெற்றுவருகின்றது. பாதுகாப்புக் காரணங்களால் சில தினங்கள் அநுராதபுரம் ரயில் நிலையம் வரையும் இச்சேவை நடைபெற்றது. தற்போது வழமையான நேரப்படி மதவாச்சி வரையும் இச்சேவை நடைபெற்றுவருகின்றதென ரயில்வே பகுதி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்புக் காரணங்களால் சில தினங்கள் அநுராதபுரம் வரையும் இச்சேவை மட்டுப்படுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. |
No comments:
Post a Comment