![]() |
இது குறித்து அமைச்சர் மேலும் கூறியதாவது,கடந்த அக்டோபர் நான்காம் திகதி கைது செய்யப்பட்ட பயங்கரவாத பிரிவை சேர்ந்த ஒருவரிடமிருந்து இரண்டு சயனைட் வில்லைகளும் தற்கொலை அங்கியொன்றும் கைப்பற்றப்பட்டிருந்தன. மேற்படி பயங்கரவாத பிரிவைச் சேர்ந்த நபர் மற்றும் மேலுமொரு சந்தேக நபரான சரவணன் ஆகியோரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னணியிலேயே வெற்றி எப்.எம் இன் பொது முகாமையாளர் ஏ.ஆர்.வி. லோஷன் கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் எமக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள லோஷன் தொடர்ந்தும் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார். பக்க சார்பற்றதும் நீதியானதுமான விசõரணைகளில் இவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்படுமானால் விடுவிக்கப்படுவார்.
No comments:
Post a Comment