உண்டியல் பணத்தை இலங்கை தமிழர் நிதிக்கு வழங்கிய மாணவி
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் ஏ.கே.எஸ்., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி ராமலட்சுமி பாரதி உண்டியலில் சேமித்த பணத்தை இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
அவர் உண்டியலில் சிறுகசிறுக சேமித்து வைத்திருந்த 494 ரூபாயை, ஆசிரியர் உதவியுடன் "டிடி' எடுத்து இலங்கை தமிழர் நிவாரண நிதிக்காக , தூத்துக்குடி கலெக்டர் பழனியாண்டிக்கு தபாலில் அனுப்பிவைத்தார்.
முதல்வர் கருணாநிதி வேண்டுகோளை ஏற்று, பெற்றோர் தந்த ரூபாயை வீணாக செலவழிக்காமல் சேமித்து அதை இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு வழங்கிய "மனிதாபிமானமிக்க' ராமலட்சுமி பாரதிக்கு கலெக்டர், ஆசிரியர்கள், அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் சமீபத்தில் ஏற்பட்ட பீகார் வெள்ள சேத நிவாரணத்திற்கும் ராமலட்சுமி பாரதி, 494 ரூபாய் "டிடி' எடுத்து அனுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment