Sunday, November 30, 2008

வன்னியில் ஏதிலிகள் முகாம் மீது வான் தாக்குதல்: இருவர் பலி! 18 பேர் படுகாயம்



சிறீலங்காப் படையினரின் வான் தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பதினெட்டுப் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் சிறீலங்காப் வான்படையினருக்குச் சொந்தமான கிபிர் யுத்த வானூர்தகிள் கிளிநொச்சி கல்லாறு நாதன்குடியிருப்பு அமைந்துள்ள ஏதிலிகள் குடியிருப்பு மீது வான் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த அனைவரும் தருமபுரம் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்கள்

01. சுதர்சன் சிவகுமார் (5 அகவை)
02. ராமன் ராமசாமி (80 அகவை)

படுகாயமடைந்தவர்கள்

01. தாயனந்தன் பவித்திரா (5 அகவை)
02. ராஜேந்திரன் லோகினி (7 அகவை)
03. ஆனந்தன் சித்திரா (9 அகவை)
04. ராஜேந்திரன் ரசிந்தா (10 அகவை)
05. செல்வம் (15 அகவை)
06. ராஜேந்திரன் தவச்செல்வி (16 அகவை)
07. ஆனந்தன் வேலவன் (18 அகவை)
08. சிவகுமார் ராஜகுமாரி (27 அகவை)
09. ராசேந்திரன் (28 அகவை)
10. நல்லையா புஸ்பாவதி (28 அகவை)
11. ராஜேந்திரன் (33 அகவை)
12. முருகேசு ருகுணுதேவி (33 அகவை)
13. ஆனந்தன் கமலாதேவி (38 அகவை)
14. கண்ணதாஸ் அமிர்தவள்ளி (40 அகவை)
15. சங்கரப்பிள்ளை (55 அகவை)
16. நாகராஜ் (55 அகவை)
17. பழனியம்மா (77 அகவை)
18. நல்லையா ஜசிந்தா (10 அகவை)

No comments:

Post a Comment