Sunday, November 23, 2008

நொச்சியாகம இராணுவ முகாமில் குண்டுவெடிப்பு: அதிகாரிகள் தர படையினர் இருவர் பலி; 12 பேர் காயம்



சிறிலங்காவின் நொச்சியாகம இராணுவ முகாமில் தவறுதலாக இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதிகாரிகள் தரத்திலான இரு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார கூறியதாவது:

பயிற்சி முடித்து வெளியேறவுள்ள அதிகாரிகள் தரத்திலான படையினருக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த இராணுவ முகாமில் செயல் பயிற்சி நடைபெற்றது.

இதன்போது தவறுதலாக குண்டுவெடித்ததில் சம்பவ இடத்தில் இரண்டு படையினர் கொல்லப்பட்டனர்.

காயமடைந்த 12 பேரும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார் அவர்.

அதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக நொச்சியாகம காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment