முறிகண்டி மேற்கு அறிவியல் நகர்ப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. |
இப்பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு பெருமெடுப்பில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் தீவிரமாக நடத்தினர். முற்பகல் 11:00 மணிவரை நடைபெற்ற நான்கு மணிநேர தீவிர தாக்குதலையடுத்து படையினரின் முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இம்முறியடிப்பின் போது படையினர் பெருமளவில் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் ஒன்றும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. |
Sunday, November 23, 2008
முறிகண்டி மேற்கில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment