Sunday, November 23, 2008

இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்



கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தனில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்களின் உழுவூர்தி மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலின் போது பொதுமக்கள் குறுகிய கால இடைவெளியில் தப்பியுள்ளனர்.

பரந்தன் பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்தும் எறிகணைத் தாக்குதலினால் மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர்.

உழுவூர்தியில் பொதுமக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த போது படையினரின் எறிகணை உழுவூர்தி மீது வீழ்ந்த வெடித்துள்ளது.

அப்போது தமது பொருட்களுடன் உழுவூர்தியில் இருந்த பொதுமக்கள் குறுகிய கால இடைவெளியில் உயிர்தப்பினர்.

இதில் சுகனந்தன் என்பவரின் உழுவூர்தி கடுமையாக சேதமடைந்துள்ளது.

No comments:

Post a Comment