Sunday, November 23, 2008

மன்னார் மாவட்டத்திலிருந்து 4,587 குடும்பங்கள் இடம்பெயர்வு



சிறிலங்கா படையினரின் போர் நடவடிக்கை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் இருந்து 4,587 குடும்பங்களைச் சேர்ந்த 17,894 பேர் கிளிநொச்சி மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த குடும்பங்கள் நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருவதாக மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தலைவர் மரியநாயம் குருஸ் தெரிவித்துள்ளார்.

மன்னார் பகுதிகளில் இருந்து எட்டுக்கும் அதிக தடவை இடப்பெயர்வுகளைச் சந்தித்து அவலத்திற்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு உதவிகள் வந்து கிடைப்பதில் இடர்கள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment