Tuesday, June 1, 2010

பலாலி அதியுயர் படைவலயத்தில் பாரிய வெடியதிர்வுகள்! பல மைல் தூரத்திற்கு செவிமடுப்பு

யாழ் வலிகாமம் வடக்கு பலாலி அதியுயர் படைவலயப் பகுதியில் பாரிய வெடியதிர்வுகள் உணரப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திங்கட்கிழமை மாலை வேளையில் இடையிடையே ஏற்பட்ட பாரிய வெடியதிர்வுகள் பல மைல் தூரத்திற்கு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாவனைக்கு உதவதாக வெடிபொருட்களை சிங்களப் படையினர் வெடிக்க வைத்த பொழுது வெடியதிர்வுகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று குடிசார் வட்டாரங்கள் கூறுகின்ற பொழுதும், இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எவையும் இதுவரை வெளிவரவில்லை.ஆனால் நேற்று மாலை நேரம் வவுனியாவிலும் சில வெடிப்பு அதிர்வுகளை உணரக்கூடியதாக இருந்தது. ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன...

No comments:

Post a Comment