Wednesday, April 21, 2010

உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்புடன் புதிய நாடாளுமன்றின் முதல் கூட்டத்தில் 225 எம்.பிக்கள் இன்று சத்தியப்பிரமாணம்



ஏழாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றில் சத்தியப்பிரமாணம் செய்கின்றனர். காலை 8.45 மணிக்கு நாடாளுமன்றம் முதல் தடவையாகக் கூடியதும் இந்த நிகழ்வு இடம்பெறும்.



கொழும்பு,ஏப்ரல் 22
ஏழாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றில் சத்தியப்பிரமாணம் செய்கின்றனர். காலை 8.45 மணிக்கு நாடாளுமன்றம் முதல் தடவையாகக் கூடியதும் இந்த நிகழ்வு இடம்பெறும்.
தொடர்ந்து சபாநாயகர், பிரதி சபாநாயகர்,குழுக்களின் பிரதித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு உரியவர்கள் தெரிவுசெய்யப்படுவர்.

அரசுத் தரப்பில் சிரேஷ்ட உறுப்பின ரான ஜோன் செனிவிரத்ன சபாநாயகராகத் தெரிவுசெய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன.
இன்றைய முதலாவது அமர்வுக்காகக் கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரை யும் காலை 8.30மணிக்கு நாடாளுமன்றத் திற்கு சமுகம் அளிக்குமாறு நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தம்மிக்க கித்துல்கொட வேண்டுகோள் விடுத்துள் ளார்.
இன்றைய இந்த நிகழ்வையொட்டி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளி யேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள் ளது. முப்படையினரும் பொலிஸாரும் நாடாளுமன்றத்தைச் சுற்றி நிறுத்தப்பட் டுள்ளனர். இந்த நிகழ்வின் செய்தியைச் சேகரிக் கச் செல்லும் ஊடகவியலாளர்கள் இன்றைய தினம் வழமைபோல் நேரடியாக நாடாளு மன்றத்திற்குச் செல்ல முடியாது. அவர்கள் காலை 7.00மணியளவில் அரச தகவல் திணைக்களத்தில் வைத்து ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரால் சோதனையிடப் பட்டு அங்கிருந்து நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர் எனத் தெரி விக்கப்படுகின்றது.
அதேபோல், சத்தியப்பிரமாண நிகழ் வைப் பார்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப் பினர்களுடன் வரும் அவர்களின் உறவி னர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள் ளது.
இந்த முதல்நாள் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாகக் கலந்துகொள்ளமாட்டார் என்றே தெரிய வருகின்றது.

No comments:

Post a Comment