Sunday, April 25, 2010

யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஒரு கடத்தல் சம்பவம்;கூடியிருந்த மக்களால் முறியடிப்பு









வெள்ளிக்கிழமை பிற்பகல் பாடசாலை முடிவுற்று மாணவர்கள் வீடு செல்வதற்காக வந்துகொண்டிருந்த சமயம் மோட்டார் சைக்கிளில் கறுப்பு நிற தலைக்கவசம் அணிந்த இருவர் குறித்த மணாவியை பலவந்தமாக இழுத்து மோட்டார் சைக்கிளில் ஏற்ற முற்பட்டனர்.

அப்போது அம்மாணவி குக்கூரல் இடவே கூடியிருந்த மாணவர்கள் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர். அங்கிருந்த பொது மக்கள் திரண்டு கடத்தல்காரர்களை வழிமறித்தனர். செய்வதறியாத கடத்தல்காரர்கள் மாணவியை கீழே இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கடத்த முற்பட்ட மாணவி ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment