Thursday, April 29, 2010

மலேசியாவிற்கு தப்பிவந்த 500க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் திருப்பி அனுப்பப்பட்டார்கள்-மலேசியா அரசு

கோலாலம்பூர் : இலங்கை போர் முடிவடைந்த பிறகு 500க்கும் மேற்பட்ட
விடுதலைப்புலிகள் மலேசியாவிற்கு தப்பிவந்ததாகவும், ஆனால் அவர்கள்
திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாகவும் மலேசிய உள்துறை அமைச்சர் ஹிஷாமுதீன்
ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு மே மாதம்
இலங்கையில் போர் முடிவடைந்த பிறகு, அங்கிருந்து விடுதலைப் புலிகளின்
முக்கிய தலைவர்கள் வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு
ஆகஸ்ட் மாதம் முதல் சென்ற மாதம் வரை 500க்கும் மேற்பட்ட புலிகள்
அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் அகதிகளாக தமது நாட்டில் தஞ்சமடைய
வந்ததாகவும், ஆனால், அவர்களைக் கைது செய்து நாடுகடத்தி விட்டதாகவும்
மலேசிய அமைச்சர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள்
பற்றிய விவரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை.

No comments:

Post a Comment