Wednesday, April 28, 2010

யாழ். கோட்டைப்பகுதி பொதுமக்களின் பாவனைக்கு



யாழ். கோட்டைப்பகுதிக்குள் பொதுமக்கள் சென்று பார்வையிடுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. மக்கள் அங்கு சுதந்திரமாக சென்று வரலாம் என 51ஆவது படையணியின் கட்டளைஅதிகாரி பிரிகேடியர் சரத் விஜயசிங்க தெரிவித்தார்.

யாழ். கோட்டைப்பகுதிக்குள் பொதுமக்கள் சென்று பார்வையிடுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை. மக்கள் அங்கு சுதந்திரமாக சென்று வரலாம் என 51ஆவது படையணியின் கட்டளைஅதிகாரி பிரிகேடியர் சரத் விஜயசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூகையில்,
யாழ். கோட்டைப்பகுதி பொதுமக்களின் பாவனைக்காக இராணு வத்தால் திறந்துவிடப்பட்டிருக் கின்றது. அங்கு செல்வதற்கு பொது மக்களுக்கு எவ்வித தடையுமில்லை. காலை முதல் மாலை வரை யாரும் சென்று பார்வையிடலாம். மக்கள் தமது பொழுதை இன்பமாகக் கழிப்பதகு இப்போது கோட்டைப்பகுதியை நாடி வருகின்றார்கள். மக்களின் இயல்பு நிலையைக் கருத்;தில் கொண்டு நாம் இதனைச் செய்திருக்கின்றோம்.
உயர் பாதுகாப்பு வலயங்கள் தவிர்ந்த எந்தப் பகுதிக்கும் பொது மக்கள் இப்ளேபாது சென்று வரமுடியும். அதற்கு எந்தவிதமான கட்டுப்பாடு களும் இல்லை. யாழ். கரையோரப் பகுதிகளில் சில இடங்கள் மிதிவெடி அபாயம் உள்ளமையால் அவை பொது மக்கள் நடமாட்டத்துக்கு அனுமதிக்கப் படவில்லை. மிதி வெடிகள் அகற்றப் பட்டதும் மக்கள் பாவனைக்கு அவை அனுமதிக்கப்படும் - என்றார்.

No comments:

Post a Comment